Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் விலை உயர்வுக்கு திட்டமிடும் டெலிகாம் நிறுவனங்கள் - அடுத்த பீதியை கிளப்பும் தகவல் லீக்!

மீண்டும் விலை உயர்வுக்கு திட்டமிடும் டெலிகாம் நிறுவனங்கள் - அடுத்த பீதியை கிளப்பும் தகவல் லீக்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 May 2022 12:32 AM GMT

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலைன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா சேவை கட்டணங்களை மீண்டும் உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிறுவனங்கள் தங்களது சலுகைகளின் விலையை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மூன்று நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து சுமார் 35 முதல் 40 மில்லியன் பயனர்களை கூடுதலாக சேர்க்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த விலை உயர்வை கொண்டு மூன்று முன்னணி நிறுவனங்களும் அடுத்த ஆண்டு இறுதியில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாயை பத்து சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும் என தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன இருந்தாலும், வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Inputs From: Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News