கிடைக்கும் கேப்பில் பொய் செய்தி பரப்பும் கலைஞர் செய்திகள் ஊடகம் - குஜராத் மாடல் என்ற பெயரில் பரப்பிய பச்சை பொய்!
By : Kathir Webdesk
"குஜராத்தில் கடந்த ஒரு வாரமாக பருவமழை பெய்துவருகிறது. ஆனால் இந்த பருவமழைக்கே குஜராத் தாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக குஜராத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள பாலங்கள், சாலைகள் அனைத்தும் மழையால் கடுமையாக சேதமடைந்துள்ளன" கலைஞர் செய்திகள் ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மாஹீர் ஹோம்ஸ் என்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு மழையால் உண்டான பாதிப்பாக காட்சி படுத்தியுள்ளனர். ஒரு தனியார் அப்பார்ட்மெண்ட்டில், அடித்தளம் இடிந்து விழுந்தை, அரசின் செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர். உண்மையில் அடித்தளம் இடிந்த அப்பார்ட்மெண்ட்டிற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை மழை பாதிப்புடன் மிகைப்படுதி காட்ட அந்த படத்தை பதிவிட்டு வாசகர்களை ஏமாற்றியுள்ளனர்.
கீழே உள்ள செய்தியில் பதிவிடப்பட்ட புகைப்படம் தனியார் அப்பர்ட்மெண்டில் நடந்த விபத்தில் எடுக்கப்பட்டது. அது மழைபாதிப்புடன் தொடர்பு படுத்தி பகிரப்பட்டு வருகிறது