Kathir News
Begin typing your search above and press return to search.

காசநோய் எதிர்ப்பு மருந்து பற்றாக்குறையா? பரவி வரும் தகவல்!

காசநோய் எதிர்ப்பு மருந்து பற்றாக்குறையா? பரவி வரும் தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Sep 2023 1:21 AM GMT

இந்தியாவில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் அத்தகைய மருந்துகளின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்புவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படும் ஊடகச் செய்திகள் தவறானவை என மத்திய அரசு கூறியது.

மருந்து உணர்திறன் காசநோய் சிகிச்சையில் ஐசோனியாசிட், ரிஃபாம்பிசின், எதம்புடோல் மற்றும் பைராசினமைடு என நான்கு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் அனைத்தும் ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்துக்கு போதுமான கையிருப்பில் உள்ளன.

பல மருந்து காசநோய்க்கான எதிர்ப்பு சிகிச்சை முறை பொதுவாக நான்கு மாதங்கள் 7 மருந்துகளைக் கொண்டுள்ளது.

அவை பெடாக்விலின், லெவோஃப்ளோக்சசின், குளோஃபாசிமைன், ஐசோனியாசிட், எதம்புடோல், பைராசினமைடு மற்றும் எத்தியோனமைடு.

மேலும் ஐந்து மாதங்கள் 4 மருந்துகள் லெவோஃப்ளோக்சசின், குளோஃபாசிமைன், பைராசினமைடு மற்றும் எத்தாம்புடோல் ஆகியவை தேவைப்படுகிறது.

காசநோய் உள்ளவர்களில் சுமார் 30% பேருக்கு, சைக்ளோசரின் மற்றும் லைன்சோலிட் தேவைப்படுகிறது.

காசநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பிற பொருட்களை கொள்முதல் செய்தல், சேமித்தல், இருப்பு வைத்தல் மற்றும் சரியான நேரத்தில் விநியோகித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா ஏற்கனவே சைக்ளோசெரின் மாத்திரைகளை வாங்கியுள்ளது. ஒரு சில மாநிலங்கள் மாவட்டங்களுக்கு கொள்முதல் செய்துள்ளன; அதன்படி, தேவைப்படும் இடங்களில் மாவட்டங்கள் கொள்முதல் செய்துள்ளன.

இத்துறையில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை. 26 செப்டம்பர் 2023 நிலவரப்படி தேசிய அளவில் இந்த மருந்துகள் போதுமான அளவுக்கு கையிருப்பில் உள்ளன என மத்திய அரசு கூறியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News