Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் விளக்கில் இருந்து எண்ணெய் சேகரித்த சிறுமி புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது?

அயோத்தியில் விளக்கில் இருந்து எண்ணெய் சேகரித்த சிறுமி புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Nov 2023 2:24 AM GMT

அயோத்தியில் சமீபத்தில் அகல் விளக்கேற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட நிகழ்வின் போது விளக்கிலிருந்து சமையலுக்கு எண்ணெய்யைச் சேகரித்த சிறுமி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.



உண்மை என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சமீபத்தில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது பொது மக்கள் விளக்குகளிலிருந்து எண்ணெய் எடுத்துச் சென்றதாக செய்திகள் சமூக ஊடகங்களில் பரவியது.

2019ம் ஆண்டில் இருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. 2019ம் ஆண்டு அயோத்தியில் 5 லட்சம் விளக்குகள் ஏற்றும் நிகழ்வு நடந்தது. அப்போது அகல் விளக்குகளிலிருந்து மீதமான எண்ணெய்யைச் சிறுமி ஒருவர் சேகரித்தார் என்று குறிப்பிட்டு இந்த படத்தை சிலர் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இதனால் சமூக வலைதளங்களில் பரவி வரும் பதிவு பொய் என்பது உறுதி ஆகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News