Kathir News
Begin typing your search above and press return to search.

விஜயகாந்தின் தவசி படத்துக்கு சீமான் வசனம் எழுதினாரா? கிண்டல் செய்வதாக நினைத்து ஏமாந்த திமுகவினர்!

விஜயகாந்தின் தவசி படத்துக்கு சீமான் வசனம் எழுதினாரா? கிண்டல் செய்வதாக நினைத்து ஏமாந்த திமுகவினர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Dec 2023 1:05 AM GMT

தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “ விஜயகாந்த் நடித்த படத்துக்கு நான் தான் வசனம் எழுதினேன். அதில் அவருடன் இருந்து பணி செய்து, மனம் திறந்து பேசிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன்” என்று கூறியிருந்தார். “தவசி படத்தின் டைட்டில் கார்டில், வசனம் எழுதியவர் இயக்குநர் உதயசங்கர் என்று தான் உள்ளது. சீமான் பொய் சொல்கிறார்” என்று கூறி திமுகவினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

உண்மை என்ன?

சீமான் தான் தவசி படத்திற்கு வசனம் எழுதினார் என தவசி திரைப்படத்தின் இயக்குனர் உதயசங்கர் கூறியுள்ளார். அப்போது சீமான் இயக்குநர் ஆவதற்கான முயற்சியில் அவர் இருந்ததால், வசனம் எழுதியது சீமான் என்று குறிப்பிட்டுவிட்டால், அவரை கதை ஆசிரியராக மாற்றி விடுவார்கள் என்று அவர் பெயர் போட வேண்டாம் என்று கூறிவிட்டாராம். சீமான் டைட்டில் கார்டில் பெயர் போட வேண்டாம் என்று கூறியதால், சீமானுக்கு நன்றி சேர்க்கப்பட்டது.


நடிகர் விஜயகாந்தின் தவசி படத்துக்கு சீமான் தான் வசனம் எழுதினார் என்பது உண்மையே.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News