Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒரு நபர் தாக்கும் வீடியோ.. சர்ச்சைக்குரிய வீடியோவின் பின்னணி என்ன..

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒரு நபர் தாக்கும் வீடியோ.. சர்ச்சைக்குரிய வீடியோவின் பின்னணி என்ன..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 April 2024 4:41 PM GMT

தற்போது நடைபெற்று வரும் இந்தியப் பொதுத் தேர்தல்களுக்கு மத்தியில், வாக்குச் சாவடியில் நடந்த நாசவேலை சம்பவத்தின் CCTV காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. வீடியோவில், ஒரு நபர் சாவடியில் பதிவேட்டில் கையெழுத்திட்டதைக் காணலாம், பின்னர் திடீரென மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பிடுங்கி தரையில் வீசுகிறார். வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் போலீசார் உட்பட அறையில் இருந்த மற்றவர்கள், அவருக்கு கூடுதல் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க உடனடியாக விரைந்து வந்தனர்.


ஆனால் இது ஒரு பழைய வீடியோ என்று தற்போது தெரியவந்து இருக்கிறது. மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஹூட்டகல்லியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவின் போது இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு 2023 மே மாதம் வெளியான தி இந்து நாளிதழில் இது குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளது. EVM கட்டுப்பாட்டுப் பிரிவை சேதப்படுத்திய குற்றவாளி மனநிலை சரியில்லாதவர் என்று சந்தேகிக்கப்பட்டது மற்றும் அவர் சிவமூர்த்தி என அடையாளம் காணப்பட்டார்.


இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எக்ஸ் ஏப்ரல் 27 அன்று வைரலான வீடியோவைப் பற்றி பேசுவதற்காக, நடந்துகொண்டிருக்கும் தேர்தலுடன் அதை இணைக்கும் கூற்றுக்கள் தவறானவை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இது 2023 கர்நாடக சட்டசபை தேர்தலின் பழைய வீடியோ என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த காணொளி நடப்பு மக்களவைத் தேர்தலுடன் தொடர்பில்லாதது. இது 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவு செய்யப்பட்டது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News