Kathir News
Begin typing your search above and press return to search.

இ-சலான் பெயரில் பெரும் மோசடி நடக்கிறதா?.. பொதுமக்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை..

இ-சலான் பெயரில் பெரும் மோசடி நடக்கிறதா?.. பொதுமக்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 July 2024 7:56 AM GMT

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சைபர் கிரிமினல்கள் ஒவ்வொரு நாளும் புதிய துவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதில் மீண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


தற்போது சைபர் கிரிமினல்கள் ஒவ்வொரு நாளும் புதிய வகையான மோசடிகளை கண்டுபிடித்து வருகின்றனர். சமீபகாலமாக வாட்ஸப்பில் போக்குவரத்து இ-சலான்கள் அனுப்பப் படுகின்றது. இது தொடர்பாக சைபர் பாதுகாப்பு நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சலான் அறிவிப்புடன், மோசடி செய்பவர்கள் URL மற்றும் APK கோப்பையும் அனுப்புகின்றனர்.

மேலும் வாட்ஸ் அப் பயனர்கள் இந்த கோப்பை தவறாக பதிவிறக்கம் செய்தவுடன் அவர்களின் போன் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுகின்றனர். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் அறிவுறுத்தியுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News