Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டப் பகலில் இந்துக்களை குறி வைத்து நடக்கும் மதமாற்றம்: செய்ய முயலும் மிஷனரிகள் உண்மை என்ன?

பட்டப் பகலில் இந்துக்களை குறி வைத்து நடக்கும் மதமாற்றம்: செய்ய முயலும் மிஷனரிகள் உண்மை என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 April 2025 7:40 AM

பட்டப்பகலில் இந்துக்களை குறி வைத்து மதமாற்றம் செய்யும் கும்பல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நிலைமைதான் தமிழகத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்த நிலைமை தற்பொழுது திருவண்ணாமலையில் அதிகமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறதாம். திருவண்ணா மலையில் தலைதூக்கும் மத பிரச்சாரம் செயல் காரணமாக மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.


திருவண்ணாமலையில் உள்ள கிராமப் பகுதிகளில் பட்டப் பகலில் நான்கு ஐந்து பெண்கள் வெளிப்படையாக வந்து நோட்டுக் கொடுத்து தாங்கள் இந்த மதத்திற்கு மாறுகிறீர்களா என்பது போன்று மக்களிடம் கேட்டுள்ளார்கள் இதை மதமாற்ற கும்பல் என்று பலரும் கண்டு அஞ்சுகிறார்கள். இதில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தைரியமாக வீடியோ எடுத்த சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த ஒரு வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி வருகிறது. அதில் அந்த மதமாற்றக் கும்பலை சேர்ந்த பெண்கள் பேசும் பொழுது, நீங்கள் இதில் கட்டாயம் மாற வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை, விரும்பினால் மாறுங்கள் விருப்பா விட்டால் போங்கள் என்பது போன்ற கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.

Input & Image Courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News