வாட்ஸ் அப்பில் பரவும் போலி தகவல்:இந்திய ராணுவம் நன்கொடை கேட்கவில்லை,மக்களே உஷார்!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் இதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லைகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது
உலக நாட்டுத் தலைவர்கள் பலர் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் மத்திய அரசு அதிரடியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது இந்த நிலையில் இந்திய ராணுவத்திற்கு நன்கொடை வழங்குமாறு வாட்ஸ் அப்பில் வருகின்ற செய்தியை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
அதாவது இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும் வீரர்கள் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலும் அவர்களுக்கு நிதி அடிப்பதற்காகவும் நன்கொடை தேவை என கோரி வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வலம் வருகிறது வாட்ஸ் அப்பில் எப்படி நன்கொடை கேட்கும் முடிவு மத்திய அரசின் ஒப்புதலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி இதனை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முன்னிலைப்படுத்தி நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது ஆனால் இது உண்மையான தகவல் அல்ல, அனைத்தும் போலி இதுபோன்ற மோசடி செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளது