பொய்யுரை பரப்பி போலி இன்பம் அடையும் கேடுகெட்ட கூட்டம் - போலி கூட்டத்தை சாடிய எஸ்.ஜி சூர்யா!
By : Kathir Webdesk
ஜூன் 20-ம் தேதி கர்நாடகா மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி ஹெலிகாப்டர் நிறுத்தப் பகுதியில் காரில் இருந்து இறங்கி வரும் போது, அவருக்கு மரியாதை செலுத்த அரசு தரப்பில் வரிசையில் பலர் காத்திருக்க கொண்டிருக்கிறார்கள்.
அப்போது வரவேற்க நின்றவரை பிரதமர் பின்னோக்கி தள்ளி நிற்க அறிவுறுத்தினார். பிரதமர் மோடி சொல்வதை புரியாமல் அந்த நபர் திகைத்து முன்னும் பின்னும் வந்து செல்கிறார். ஒருவழியாக பிரதமர் சொல்வதை புரிந்து கொண்டு பின்னோக்கி நகர்ந்து மற்றவர்களுடன் நிற்கிறார். அதன்பின்னர், பிரதமர் மோடி வரிசையாக அனைவருக்கும் வணக்கம் வைத்துக் கொண்டு நடந்து செல்கிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்த சிலர் பிரதமர் கேமரா வைத்துள்ள விதத்தை பார்த்து அப்படி செய்கிறார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில் அங்கு நின்றவர்கள் தன் காலில் விழக்கூடாது என்பதற்காகவே பிரதமர் அப்படி செய்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட முழு கட்சியை தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் 22 வினாடி வீடியோ மட்டும் கட் செய்து பரப்பப்படுகிறது.