தேவர் பற்றி பொய் பரப்பும் முரசொலி - மக்களை முட்டாளக்கி கிளப்பிவிட்ட வதந்தி, உண்மையை அம்பலப்படுத்திய SG.சூர்யா!
By : Kathir Webdesk
"நம் உயிர் உள்ளவரை, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ்., நுழையக் கூடாது" என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூறியதாக, முரசொலி ஒரு மீம் வெளியிட்டது. தனக்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாதென, அது வாட்ஸ்ஆப்பில் வந்ததாக கூறியது.
இது முழுக்க முழுக்க வடிகட்டிய பொய். முத்துராமலிங்கதேவர் உயிருடன் இருந்தவரை, ஆர்எஸ்எஸ்., உடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். ஆர்எஸ்எஸ்., தலைவர்களுடன் நட்பு பாராட்டினார்.
ஆர்எஸ்எஸ்., இரண்டாவது தலைவர் கோல்வால்கர், 51வது பிறந்த நாள் விழா, 1956ல் நாடு முழுதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மதுரையில் நடந்த விழாவுக்கு, முத்துராமலிங்கத் தேவர் தலைமை வகித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில், 'தம் கருத்துக்கள் ஆர்எஸ்எஸ்., கருத்துக்களோடு இணைந்தே இருந்து வந்திருக்கிறது' என்றார்.
உண்மை இப்படி இருக்க, முத்துராமலிங்கத் தேவர், ஆர்எஸ்எஸ்., அமைப்பை எதிர்த்தார் எனக் கூறி, தமிழக மக்களிடையே ஆர்எஸ்எஸ்., குறித்த தவறான, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த, திமுக முயற்சிப்பது நிரூபணமாகிறது.