Kathir News
Begin typing your search above and press return to search.

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பெரியார் சிலை முன் போட்டோ எடுத்ததாக பரப்பி வரும் தி.மு.க ஐ.டி விங்!

up cm yogi with his spiritual guru

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பெரியார் சிலை முன் போட்டோ எடுத்ததாக பரப்பி வரும் தி.மு.க ஐ.டி விங்!

MuruganandhamBy : Muruganandham

  |  11 Jan 2022 1:07 PM GMT

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரியார் சிலை முன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக, திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவை வைரலாக்கி வருகின்றனர்.



உண்மை சரிபார்ப்பு:

யோகி ஆதித்யநாத் பெரியார் சிலை முன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக வைரலாகும் புகைப்படம் ஆய்வு செய்து பார்க்கப்பட்டது. அதில் வைரலாகும் படத்தில் இருக்கும் சிலையில் இருப்பவர் பெரியார் அல்ல. அவர் யோகி ஆதித்யநாத்தின் ஆன்மீக குருவாக கருதப்படும் மஹந்த் அவைத்யநாத் என்பதும் தெரிய வந்தது. யோகி ஆதித்யநாத் கடந்த (07/01/2022) தேதியன்று உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியில் மஹந்த் வைத்யநாத்தின் சிலையை திறந்து வைத்து, கூடவே பல நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. மஹந்த் அவைத்யநாத் சிலையுடன் யோகி ஆதித்யநாத் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, பெரியார் சிலை முன் எடுத்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் திரித்து பரப்பி வருகின்றனர்.




முடிவு:

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரியார் சிலை முன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அவர் மஹந்த் அவைத்யநாத் சிலைக்கு முன் நின்றே புகைப்படம் எடுத்துள்ளார்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News