Kathir News
Begin typing your search above and press return to search.

மதரஸாவில் இருந்து ஆயிரக்கணக்கான வாள்கள் கைப்பற்றப்பட்டதா? வைரலாகி வரும் பதிவு!

Viral message claims arms cache seized from a madrassa in Uttar Pradesh’s Bijnor

மதரஸாவில் இருந்து ஆயிரக்கணக்கான வாள்கள் கைப்பற்றப்பட்டதா? வைரலாகி வரும் பதிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 April 2022 11:31 AM GMT

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு மதரஸாவில் இருந்து ஆயிரக்கணக்கான வாள்கள் மற்றும் கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆறு பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் பயனர் ஒருவர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மதரஸாவில் இருந்து ஆயுதங்கள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வாள்களை பிஜ்னோர் காவல்துறை கைப்பற்றியதாகக் கூறி, மார்ச் 29, 2022 அன்று ட்வீட் ஒன்றைப் பதிவு செய்தார். இந்த ட்வீட் உடனடியாக வைரலாகி, 1,500க்கும் மேற்பட்ட ரீட்வீட்களை குவித்தது.


மதரஸாவில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாக சமூக ஊடக தளங்களில் பதிவுகள் கூறினாலும், பிஜ்னூர் போலீசார் வைரலான பதிவு குறித்து தெளிவுபடுத்தினர். அந்த படங்கள் போலியானது என்றும், பதிவு தவறாக வழிநடத்தும் என்று அறிவித்தது.

ஒரு கடத்தல் சம்பவத்திவள் 6 பேர் கைது செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கைத்துப்பாக்கி, 4 துப்பாக்கிகள், 49 தோட்டாக்கள் மற்றும் 1 கார் ஆகியவற்றை மீட்டனர். அந்த செய்தியின் படங்கள் இவ்வாறு திரித்து பரப்பப்பட்டன.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News