Kathir News
Begin typing your search above and press return to search.

'சாந்தி நிகேதன்' என்ற பெயரில் இயங்கும் மிஷனரி இல்லம் - மதமாற்றம் நடப்பது குறித்து புகார்!

சாந்தி நிகேதன் என்ற பெயரில் இயங்கும் மிஷனரி இல்லம் - மதமாற்றம் நடப்பது குறித்து புகார்!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  1 March 2021 2:35 AM GMT

சாந்தி நிகேதன் என்ற பெயரில் இமாச்சலப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகம் உண்மையில் மத மாற்ற மையமாக செயல்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. FCRA உரிமம் பெற்று வெளிநாடுகளில் இருந்து 'சமூக சேவைக்காக' நிதி பெறும் அமைப்புக்கள் பல உண்மையில் மத மாற்றத்தில் ஈடுபடுவது குறித்து Legal Rights Observatory அமைப்பு ஆதராங்களுடன் தகவல் வெளியிட்டு வருகிறது.

இந்த அமைப்பு வெளிப்படுத்தி வரும் மிஷனரி அமைப்புகளின் வரிசையில் 'சாந்தி நிகேதன் குழந்தைகள் காப்பக அறக்கட்டளை' வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று ஒன்றும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளை மதம் மாற்றி வருவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இமாச்சலப் பிரதேசம் சோலன் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்த காப்பகம் 1989ஆம் ஆண்டு மிசோரத்தில் இருந்து இதற்கென்றே அனுப்பி வைக்கப்பட்ட மிஷனரிகளால் தோற்றுவிக்கப்பட்டது.

தொடக்கத்தில் மிசோரம் இவாஞ்சலிக்கல் ஃபெல்லோஷிப் அமைப்பு இந்த காப்பகத்தை நடத்தி வந்துள்ளது. இமாச்சலில் இதற்கென்று நிலம் வாங்கி, காப்பகம் கட்டி, அங்கு பணியாற்ற ஆட்களை அனுப்பி அவர்களுக்கு ஊதியமும் வழங்கி வந்துள்ளது. எனினும் தற்போது காப்பக நிர்வாகத்தில் இதன் பங்கு இல்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து கனடாவைச் சேர்ந்த Child Of Mine என்ற மிஷனரி அமைப்பு இந்த காப்பகத்தின் தேவைகளை கவனித்து வருவதாக காப்பகத்துக்கு வந்து 'சேவை' செய்த சில வெளிநாட்டவர்கள் தங்களது வலைதள பதிவுகளில் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் 2012ஆம் ஆண்டு காப்பகத்துக்கு வந்த வெளிநாட்டவர் குழு காப்பகத்துக்கு சொந்தமாக 1.5 ஏக்கர் நிலம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.






2012-13 ஆண்டுகளில் வெளிநாட்டவர்கள் குழுக்கள் Child Of Mine அமைப்பின் வழிகாட்டுதலில் இந்த குழந்தைகள் காப்பகத்தில் புதிய கட்டிடம், குழாய் தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வந்துள்ளனர். அவர்களில் சிலர் தங்களது அனுபவம் குறித்து பின்வருமாறு பதிவு செய்துள்ளனர்.

"கடவுளின் முகத்தைத் தேடினோம். இமயத்தில் அவரது குரல் கேட்பது போல் உணர முடிந்தது".."நான் சாகசப் பயணமாக லோ தனிப்பட்ட தேவைக்காகவோ அங்கு செல்லவில்லை. நான் இயேசுவுக்கு சேவையாற்ற‌ சென்றேன். இந்தக் குழந்தைகளுக்கு இவர்களை இயேசு அன்பு செய்கிறார் என்று தெரிவது அவசியம்".."சாந்தி நிகேதனில் இயேசுவின் காலடித் தடங்கள் எங்கும் நிறைந்துள்ளன. 3 மணி நேர ஜெபம் நடக்கிறது. மூச்சு விடுவது போல் ஜெபம் செய்வதும் பைபிள் வாசிப்பதும் இன்றியமையாததாக இருக்கின்றன" இவ்வாறெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.





இந்த காப்பகத்தில் மத மாற்றம் தான் நடக்கிறது என்பதை வெளிப்படுத்த இது போன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன. 2013ஆம் ஆண்டு வந்த ஒருவர் தான் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே வந்ததாகக் குறிப்பிடுகிறார். அதே பதிவில் குழந்தைகளை ஆற்றுக்கு விளையாட அழைத்துச் சென்ற போது உள்ளூர் பெண்மணிகள் சிலரை ஆற்றில் மதம் மாற்றி ஞானஸ்நானம் செய்வித்ததாகவும் குறிப்பிடுகிறார்.







ஆனால் சாந்தி நிகேதன் அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் ₹3 கோடி ரூபாய் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து நிதியாக பெற்றிருக்கிறது. அதற்கு முன்பு 2010 முதல் 2015 வரையிலான கால கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதாக FCRA ஆண்டு அறிக்கைகளில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இதே ஆண்டுகளில் வெளிநாட்டவர்கள் இமாச்சலுக்கு வந்து பள்ளி, சர்ச், உணவுக் கூடம் உள்ளிட்டவற்றைக் கட்டித் தந்து உதவி இருக்கிறார்கள்.

எனவே இந்த நிதி முறைகேடுகள் மற்றும் வெளிநாட்டு நிதி மதமாற்றத்திற்கு தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து தகுந்த ஆதாரங்களுடன் Legal Rights Observatory அமைப்பு உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த அமைப்பின் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான உரிமத்தை ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News