Kathir News
Begin typing your search above and press return to search.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் புதிய வேகத்தை எடுக்கும் இந்தியா: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் புதிய வேகத்தை எடுக்கும் இந்தியா: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 May 2021 12:00 PM GMT

இந்தியாவில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் உதவியாக செயல்பட்டது. தற்போது இந்திய ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் நேற்று நடந்தது. இதில் இந்தியா ஐரோப்பிய ஒன்றிய மாநாடு இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய வேகத்தை எடுத்துள்ளதாக வெளி விவகார அமைச்சகம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. பிரதமர் மோடி இந்த சந்திப்புக்காக போர்ச்சுகலுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அது நிறுத்தப்பட்டது.


மேலும் நேற்று நடந்த வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் அனைத்து நாடுகளின் தலைவர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார். கொரோனா தொற்றுநோய் மற்றும் சுகாதார ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.


இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்தை போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா தொகுத்து வழங்கினார். போர்ச்சுகல் தற்போது ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் ஜனாதிபதி பதவியை வகிக்கிறது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய சிவில் பாதுகாப்பு பொறிமுறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் உறுப்பு நாடுகளின் விரைவான ஆதரவையும் உதவியையும் இந்தியா அப்போது பாராட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News