Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்க வெளியுறவுச் செயலருடன் உலகளாவிய ஒத்துழைப்பு குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்.!

அமெரிக்க வெளியுறவுச் செயலருடன் உலகளாவிய ஒத்துழைப்பு குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 May 2021 12:35 PM GMT

அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் S.ஜெய்சங்கர் அவர்கள், அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தினார். இதில் இரண்டு நாட்டைச்சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள், இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு குறித்து விவாதித்து இருக்கிறார்கள்.


ஜெய்சங்கருடனான சந்திப்புக்குப் பின்னர் ஒரு ட்வீட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கன் இதுபற்றி கூறுகையில், "அமெரிக்க கொரோனா நிவாரண முயற்சிகள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எங்கள் ஆதரவு ஆகியவை அடங்கும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னுரிமைகள் குறித்து ஜெய்சங்கருடன் பேசியுள்ளேன். நண்பர்களாகிய நாங்கள் பகிரப்பட்ட அக்கறையின் அடிப்படையில் குறைகளை ஒன்றாக நிவர்த்தி செய்வோம்" எனக் கூறினார்.


இதுகுறித்து செயல் உதவி செயலாளர் டீன் தாம்சன் கூறுகையில், அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டில் 20 மில்லியன் கூடுதல் அளவுகளை உற்பத்தி செய்ய நாட்டிற்கு உதவும் முக்கியமான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு, அமெரிக்கா அனுப்பி வைக்க அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். முக்கியமான தடுப்பூசி உற்பத்தி பொருட்களின் எங்கள் சொந்த ஆர்டர்களில் ஒன்றை நாங்கள் திருப்பி விட்டோம். இது 20 மில்லியனுக்கும் அதிகமான கூடுதல் அளவிலான அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியை இந்தியா செய்ய அனுமதிக்கும்" என்று அவர் கூறினார். ஜெய்சங்கர் அவர்களின் வருகை இந்தியாவுடனான உறவின் ஆழத்தையும் வெளிப்படுத்தியதாக அவர் மேலும் கூறினார். உலகளாவிய தடுப்பூசி விநியோகம் மற்றும் தடுப்பூசி உற்பத்திக்கான முக்கியமான உள்ளீடுகளின் உலகளாவிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது எப்படி? இன்று போன்ற விவாதங்கள் நடைபெற்றது என்றும் அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News