Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா வேகத்தில் பரவும் கருப்பு பூஞ்சை - கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரம்!

கொரோனா வேகத்தில் பரவும் கருப்பு பூஞ்சை - கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Jun 2021 12:23 PM GMT

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு, அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது. அதாவது பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்புத் திறனை பொருத்து அவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவதால் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அதற்கும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.


கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்து பவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிக உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது. இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.


நாடு முழுவதும் 8,800 க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பதாக காணப்படுகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசும் முயற்சி எடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது, கர்நாடகாவில் ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதில், பெங்களூரு நகர பகுதி அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News