Kathir News
Begin typing your search above and press return to search.

சரக்கு ரயில் வழித்தடத்தில் ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்று வெற்றி கண்டுள்ள இந்திய ராணுவம்!

சரக்கு ரயில் வழித்தடத்தில் ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்று வெற்றி கண்டுள்ள இந்திய ராணுவம்!

ParthasarathyBy : Parthasarathy

  |  16 Jun 2021 12:46 PM GMT

பாதுகாப்பு படைகளின் போக்குவரத்தை அதிகரிக்க சரக்கு ரயில் வழித்தடத்தை இந்திய ரயில்வே சமீபத்தில் உருவாக்கியது. இந்திய பாதுகாப்பு படைகளின் தயார்நிலையை அதிகரிக்க முதல் நடவடிக்கையாக, சரக்கு ரயில் வழித்தடத்தில் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் சோதனையில் இந்திய ராணுவம் வெற்றி கண்டுள்ளது.


பாதுகாப்பு படைகளின் போக்குவரத்து திறனை அதிகரிக்க, பிரத்யேக சரக்கு ரயில் வழித்தட கார்ப்பரேஷன், இந்திய ரயில்வே மற்றும் இந்திய ராணுவத்துக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த சரக்கு ரயில் வழித்தடத்தில், நியூ ரெவாரியிலிருந்து, நியூ புலேரா வரை ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களை ரயிலில் ஏற்றி இந்திய ராணுவம் பரிசோதித்து, அதில் வெற்றி அடைந்தது. இதன் மூலம், இந்திய பாதுகாப்பு படைகளின் போக்குவரத்தில், பிரத்யேக சரக்கு ரயில் பாதை மற்றும் அதன் துணை கட்டமைப்பின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும். .

"இந்தப் பரிசோதனைகள், பாதுகாப்பு படைகளின் தயார்நிலையை அதிகரிக்க வழிவகுக்கும் முதல் நடவடிக்கை. இந்த முன்முயற்சி, திட்டமிடல் காலத்திலேயே, நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில், ராணுவத் தேவைகளும் இணைந்துள்ளதை உறுதி செய்வதற்கான நடைமுறையை ஏற்படுத்தும்" என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News