இந்த ஐந்து தூண்களின் அடிப்படையில் இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: பிரதமரின் அழைப்பு.!
By : Bharathi Latha
நேற்று நடைபெற்ற விவாடெக் டிஜிட்டல் நிகழ்ச்சியில் பல உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். விவாடெக் தொழில்நுட்ப மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பிரதமர் பேசினார். திறமை, சந்தை, மூலதனம் உள்ளிட்ட தூண்களின் அடிப்படையில், இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர்கள் கூறுகையில், தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் கடுமையான நோய் தொற்று காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பெரிதும் உதவி செய்தது குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண்பதற்கு மற்றும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிப்பதற்கும் உதவி வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ஆகியவை ஒத்துழைப்பிற்கான முக்கிய துறையாக இந்தியா தற்பொழுது மாறி வருகிறது. இந்த நேரத்தில் இது முக்கியமானது. தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப்களில் இந்தியாவின் முன்னேற்றங்கள் நன்கு அறியப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புகலிடமாக இந்தியா இருந்து வருகிறது. சில நாட்களாக பல நிறுவனங்கள் இங்கு தோன்றி உள்ளது. உலகம் முழுவதும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவில் டேட்டா நுகர்வு அதிகமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப் பட்டவர்களை விரைவில் கண்டறிய ஆரோக்கிய சேது செயலி பங்கும் குறிப்பிடத்தக்கது. திறமை, சந்தை, மூலதனம், சூழல் அமைப்பு மற்றும் திறந்த கலாசாரம் ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் இந்தியாவில் உலக நாடுகள் முதலீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் அவர்கள் பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.