Kathir News
Begin typing your search above and press return to search.

கொச்சியில் கட்டப்படும் போர்க்கப்பல் பணிகளை நாளை ஆய்வு செய்கிறார் ராஜ்நாத் சிங்!

கொச்சியில் கட்டப்படும் போர்க்கப்பல் பணிகளை நாளை ஆய்வு செய்கிறார் ராஜ்நாத் சிங்!

ParthasarathyBy : Parthasarathy

  |  23 Jun 2021 2:56 PM GMT

கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கட்டப்படும் கப்பல் பணிகளை ஆய்வு மேற்கொள்ள ராஜ்நாத் சிங் நாளை கேரளா செல்கிறார்.


கேரளாவில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட்டில் இந்திய கடற்படைக்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கொச்சி செல்கிறார். நாளையும் (24 ஆம் தேதி), நாளை மறுதினமும் ராஜ்நாத் சிங்க் கொச்சியில் மேற்கொள்ளப்படும் கப்பல் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News