Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய மற்றும் அமெரிக்க கடற்படையினர் கூட்டு ராணுவப் பயிற்சி!

இந்திய மற்றும் அமெரிக்க கடற்படையினர் கூட்டு ராணுவப் பயிற்சி!

ParthasarathyBy : Parthasarathy

  |  24 Jun 2021 10:50 AM GMT

இந்திய பெருங்கடல் வழியாக அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ரொனால்டு ரீகன் என்னும் விமானம் தாங்கி கப்பல் 2 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு நாள் பயணத்தின் போது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையில் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறுகிறது.


நேற்று தொடங்கிய இந்த கூட்டு ராணுவப் பயிற்சியில், இந்தியா மற்றும் அமெரிக்கா என இரு நாட்டு கடற்படைகளுக்கும் சொந்தமான விமானங்கள் பங்கேற்றன. இந்த 2 நாள் கூட்டுப்பயிற்சியின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேம்படும் என்றும் மேலும் இரு நாட்டுக்கு இடையே கடல்சார் செயல்பாடுகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த கூட்டுப்பயிற்சியின் மூலம் இரு நாட்டுப் படைகளும் தங்கள் போர் திறன்களையும், அதன் நுணுக்கங்களையும் பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் இது போன்ற கூட்டுப்பயிற்சிகளின் மூலம் அமைதியை நிலைநாட்டவும், கடல்சார் ஆளுமையில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் உதவும் என அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News