Kathir News
Begin typing your search above and press return to search.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் பயணம்!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் பயணம்!

ParthasarathyBy : Parthasarathy

  |  26 Jun 2021 10:23 AM GMT

இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம், பரன்க் என்ற கிராமத்தில் பிறந்தவர். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரான பரன்க் கிராமத்திற்கு சிறப்பு ரயில் மூலம் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார்.



ராம்நாத் கோவிந்த் தான் பிறந்த ஊரான பரன்க் கிராமத்தை காணவும், தன் பள்ளி தோழர்கள், உறவினர்கள் ஆகியோரை சந்திக்கவும் விரும்பினார். அதே போல் தன்னுடைய சொந்த ஊருக்கு ரயில் மூலம் செல்ல வேண்டும் என்ற ஆசையும் ஜனாதிபதிக்கு இருந்தது. எனவே இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவி சுனிதா தேவியுடன் டில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து பரன்க் கிராமத்திற்கு சென்று அடைந்தார்.


இந்திய ஜனாதிபதியை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில் வாரிய தலைவர் சுனித் ஷர்மா ஆகியோர் டெல்லியில் இருந்து வழியனுப்பி வைத்தனர். அதே போல் கான்பூர் ரயில் நிலையத்தில் உத்தர பிரதேசத்தின் ஆளுநர் மற்றும் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராம்நாத் கோவிந்தை வரவேற்றனர்.

இது போன்று கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், சிறப்பு ரயில் மூலம் டில்லியிலிருந்து டேராடூனுக்கு பயணித்தார். அதன் பின்னர் 15 ஆண்டுகளுக்குபின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரயில் மூலம் தனது சொந்த கிராமத்திற்கு பயணம் செய்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News