Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல்!

ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  26 Jun 2021 3:57 PM IST

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், மத்திய கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் பேசுகையில், ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும், உலக பாரம்பரிய சின்னம் என்ற பட்டியலில் ராமர் பாலம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கும் அதில் விருப்பம் இருக்கிறது. உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் ராமர் பாலம் சேர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே ராமர் பாலம் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பாக விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டிசம்பர் 2017 ஆண்டு டிஸ்கவரி சேனல் 'பண்டைய நில பாலம்' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இது ராம் சேது அமைப்பு இயற்கையானது அல்ல, மனிதனால் உருவாக்கப்பட்டது என்று கூறியது.

அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகம் , கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு ஓரிகான் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் மற்றும் விஞ்ஞானிகளும் இதனை உறுதிபடுத்தியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

அதன் விஞ்ஞான பகுப்பாய்வு தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாறைகள் 7,000 ஆண்டுகள் பழமையானவை என்பதை நிரூபிக்க முயன்றன. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, செயற்கைக்கோள் படத்தில் உள்ள கட்டமைப்பு இயற்கையானது அல்ல, ஆனால் மனிதர்களால் கட்டப்பட்டது என்பது விளக்கப்பட்டுள்ளது.

வரலாற்று பின்னணி:

ராமர் பாலம் என்பது தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளுக்கு இடையே கடல் பகுதிக்குள் இருக்கக்கூடிய ஒரு திட்டு போன்ற பகுதியாகும். ராமாயணத்தில் ராமர் வானரப் படைகளின் உதவியோடு இலங்கை சென்றதாக தகவல் இடம் பெற்றுள்ளது. அப்போது ராமருக்கு வானரங்கள் கல் எடுத்து கொடுத்து உதவி செய்து கடலுக்குள் பாலம் அமைக்கப்பட்டதாக ராமாயணம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் பிரகலாத், ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அப்படி அறிவிக்கும் பட்சத்தில், ராமர் பாலத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு கிடைக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News