Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் முன்னாள் காவல்துறை அதிகாரி சுட்டு கொலை!

காஷ்மீரில் முன்னாள் காவல்துறை அதிகாரி சுட்டு கொலை!

ParthasarathyBy : Parthasarathy

  |  28 Jun 2021 8:47 AM GMT

தெற்கு காஷ்மீரின் ஹரிபாரிஹாம் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் காவல்துறை அதிகாரி பயாஸ் அஹ்மத் . இவர் வீட்டில் இருந்த நேரம் பார்த்து, இரவில் பயங்கரவாதிகள் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் முன்னாள் காவல் துறை அதிகாரி பயாஸ் அஹ்மத் மற்றும் அவரது மனைவி சுட்டு கொல்லப்பட்டனர்.


காஷ்மீரில் புல்வாமா மாவட்டம், ஹரிபாரிஹாம் கிராமத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி பயாஸ் அகம்மது வசித்து வந்தார். இவரது வீட்டில் இரவு நேரத்தில் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பயாஸ் அஹ்மத் மற்றும் அவரது மனைவி ராஜபேகம் சம்பவ இடத்திலையே உயிர் இழந்தனர். மேலும் அவர்களது மகள் ராபியா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் காவல் அதிகாரியை சுட்டுவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதியை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


காஷ்மீரின் லடாக் பகுதிக்கு நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார். அவர் வருகைக்கு சில மணி நேரம் முன்னதாக ஜம்மு விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சில இடங்களில் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இந்த நிலையில் தற்போது முன்னாள் காவல் அதிகாரியை பயங்கரவாதிகள் வீடு புகுந்து சுட்டு கொன்றுள்ளனர். இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, மேலும் இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News