Kathir News
Begin typing your search above and press return to search.

'பதவிக்காலத்திற்கு பின்னும் பணிகள் தொய்வின்றி நடக்கும்படி பணியாற்றியுள்ள தலைவர் மோடி' : அமித்ஷா புகழாரம்!

பதவிக்காலத்திற்கு பின்னும் பணிகள் தொய்வின்றி நடக்கும்படி பணியாற்றியுள்ள தலைவர் மோடி : அமித்ஷா புகழாரம்!

ParthasarathyBy : Parthasarathy

  |  12 July 2021 12:24 PM GMT

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் 244 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் காந்தி நகர் தொகுதியின் எம்.பி.யும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டார். மேலும் அங்கு தொடங்க இருக்கும் வளர்ச்சி திட்டங்களை அமித் ஷா திறந்து வைத்ததோடு, அந்த திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.


இதனை அடுத்து அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில் "அரசியலில் பல்வேறு தலைவர்களை நான் பார்த்துள்ளேன். சிலர் புதிய திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டும் பணியை மட்டுமே செய்வர். இன்னும் சிலர் தங்கள் பதவிக்காலத்தில் மட்டும் மாநிலத்தின் வளர்ச்சிப் பணியை பற்றி யோசிப்பர். ஆனால் தனது பதவிக்காலத்துக்கு பின்னும் வளர்ச்சிப் பணிகளை தொய்வின்றி நடக்கும்படி திட்டமிட்டு பணியாற்றியுள்ள முதல் தலைவர் நரேந்திர மோடி தான்.


குஜராத் முதலமைச்சாராக நரேந்திர மோடி பதவி வகித்த காலத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை தொலைநோக்கு பார்வையோடு செய்துள்ளார். நரேந்திர மோடி முதல்வராக இருந்த 14 ஆண்டு காலத்தில் குஜராத் மக்கள் ஏராளமான நன்மைகளை அனுபவித்துள்ளனர். அவரது பதவிக் காலம் முடிந்த பின்னும் குஜராத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடக்கும் விதமான ஏற்பாடுகளை நரேந்திர மோடி செய்துள்ளார். அது மட்டுமின்றி இந்த கொரோனா காலத்தில் கூட குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் குறையாத படி மோடியின் தலைமையிலான அரசாங்கம் செயல்பட்டு வந்துள்ளது." என்று அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News