Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தான் அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம்!

ஆப்கானிஸ்தான் அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 July 2021 12:58 PM GMT

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் தற்போது சுற்றுப்பயணமாக பல நாடுகளில் இந்தியாவின் சார்பாக அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். அந்த வகையில் தற்போது வெளியுறவு துறை அமைச்சர் முகம்மது ஹனீஃப் அத்மரை சந்தித்துப் பேசினார். இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ஆப்கானிஸ்தானில், தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பே நகரில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தலிபான் அமைப்புகள் குறித்த நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக தஜிகிஸ்தானுக்கு இரண்டு நாட்கள் பயணமாக ஜெய்சங்கர் சென்றுள்ளார். ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நாளை நடைபெறுகிறது.


ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்பு ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு விவகாரம் தொடர்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளதால், அந்நாட்டின் முக்கிய பகுதிகள் தங்கள் வசம் வந்துள்ளதாக தலீபான் அமைப்பு கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு படையினருக்கும் தலீபான்களுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News