Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்டா கொரோனா பரவல் காரணமாக இந்திய பயணிகளுக்கு தடை விதித்த கனடா!

டெல்டா கொரோனா பரவல் காரணமாக இந்திய பயணிகளுக்கு தடை விதித்த கனடா!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 July 2021 6:25 PM IST

இந்தியாவில் தற்போது டெல்டா பகை கொரோனா வைரஸ் காரணமாகத்தான் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று மருத்துவ குழுவினர் கருத்து தெரிவித்திருந்தனர். எனவே இதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளை தங்களுடைய நாட்டுக்கு நாட்டிற்கு பயணம் செய்வதைத் தடை செய்து வைத்து உள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய பயணிகளுக்கு தடையை ஆகஸ்டு 21ம் தேதி வரை நீட்டித்து கனடா அரசு அறிவித்துள்ளது.


ஏற்கனவே இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதும், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு தடை விதித்தது. அதாவது, கடந்த ஏப்ரல் 22ம் தேதி இந்த தடை விதிக்கப்பட்டது. ஜூலை 21ம் தேதியுடன் இந்த தடை முடிவுக்கு வர இருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்திய பயணிகள் விமானங்களுக்கான கனடாவின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து விளக்கம் அளித்துள்ள கனடா போக்குவரத்து துறை மந்திரி, மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்தியாவில் நிலைமை இன்னும் மிக மோசமாகவே உள்ளது. டெல்டா வகை கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News