Kathir News
Begin typing your search above and press return to search.

ஒடிசா: கோப்ரா நாகம் வீட்டிற்குள் நுழையாமல் தடுத்து நிறுத்திய துணிச்சலான பூனை!

ஒடிசா: கோப்ரா நாகம் வீட்டிற்குள் நுழையாமல் தடுத்து நிறுத்திய துணிச்சலான பூனை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 July 2021 1:02 PM GMT

பொதுவாக செல்லப்பிராணிகள் மீது பிரியம் கொண்டவர்கள் தங்களுடைய வீட்டில் ஏதேனும் ஒரு செல்லப் பிராணிகளை குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வளர்ப்பார்கள். ஆபத்தான சமயங்களில் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டும் வகையில் அத்தகைய செல்லப் பிராணிகள் பல்வேறு துணிச்சலான செயல்களை செய்ய நேரிடலாம். அந்த வகையில் தற்போது ஒடிசாவில் தலைநகரான புவனேஸ்வரில் உள்ள பீமதாங்கி பகுதியில் தான் இதுபோன்ற ஒரு துணிச்சலான பூனை தன்னுடைய முதலாளியின் வீட்டிற்குள் கோப்ரா நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியது.


பாம்பு வகைகளில் அதிக விஷம் கொண்ட பாம்புகள் கோப்ரா வகையான தான் அறியப்படுகின்றன. இருந்தாலும் தன் முதலாளியின் வீட்டில் எந்த ஒரு விலங்கும் நுழையவிடாமல் பாதுகாப்பதற்காக, சுமார் 30 நிமிடங்களாக நாகத்தின் முன்பாக இந்த பூனை நின்றது அங்கிருந்தவர்களை மிகவும் மாற்றத்துக்கு உள்ளாக்கியது. ஐந்தறிவு ஜீவனான இந்தப் பூனை எப்படி இது போன்ற செயல்களில் ஈடுபடும் என்பதும் பல்வேறு எண்ணங்களின் தோன்றும் ஒரு விஷயமாகவும் இருக்கின்றது.




பிறகு அங்கே இருந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்பு வனத்துறையினர் அங்கு வந்து அந்தப் பாம்பு பிடித்து சென்றனர். இருந்தாலும் அந்தப் பாம்பு அந்த இடத்தை விட்டுப் போகும் வரை அந்த பூனை அதே இடத்தில் நின்றது. இதுபற்றி வீட்டின் உரிமையாளர் கூறுகையில், "நாங்கள் எங்கள் வீட்டில் ஒருவராக அந்தப் பூனையை வளர்கிறோம். எனவே எங்களுக்கு ஒரு பிரச்சினை வரும் பொழுது அது ஓடிவந்து உதவுகிறது" என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தப் பூனையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News