Kathir News
Begin typing your search above and press return to search.

தசரா ஊர்வலத்தில் புகுந்த கார்., சதீஸ்கரில் நடந்த பயங்கரம் !

சதீஸ்கரில் தசரா ஊர்வலத்தின் போது அதிவேகமாக வந்த கார் பக்தர்கள் மீது மோதியது.

தசரா ஊர்வலத்தில் புகுந்த கார்., சதீஸ்கரில் நடந்த பயங்கரம் !

TamilVani BBy : TamilVani B

  |  16 Oct 2021 12:00 AM GMT

தசரா விழாவின் போது பக்தர்கள் மீது கார் மோதி 16 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவது தசரா விழா வெகு விமர்சையாக கொண்டாட்டது. இந்நிலையில், சதீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்பூர் பகுதியில் தசரா விழா கொண்டாடப்பட்டது. அப்போது நடந்த ஊர்லவத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது.

இதில், ஊர்வலத்தில் வந்த அப்பாவி பக்தர்கள் 16 பேர் படுகாயமடைந்தனர். அந்த காரை ஒட்டிவந்த இளைஞர் தப்பியோடி விட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து இந்த சம்பவத்திற்கு காரணமான இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து அதிக அளவிலான கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர். கஞ்சா போதையில் அவர்கள் விபத்து ஏற்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

Source: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News