இனி திருமலை வி.ஐ.பி பிரேக் தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் கிடைக்கும் - தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு !
By : Mohan Raj
திருமலையில் வி.ஐ.பி ப்ரேக் தரிசன டிக்கெட்டுகள் வரலாற்றில் முதன் முறையாக ஆன்லைனில் நாளை முதல் விற்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருப்பதில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் மிகவும் பிரசித்தம், முக்கிய அரசு அதிகாரிகள், மந்திரி போன்றவர்களின் சிபாரிசு கடிதம் இருந்தால் திருப்பதியில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் கிடைக்கும். கூட்டத்தில் சிக்காமல், நின்று நிதானமாக பார்க்க கூடிய தரிசனமாகும். இதுவரை இந்த டிக்கெட்கள் ஆன்லைன் பதிவில் விற்க்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் வரலாற்றில் முதல் முறையாக நாளை முதல் ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான வி.ஐ.பி பிரேக் தரிசன டிக்கெட் விற்கப்பட உள்ளது. தினமும் 1000 டிக்கெட் வீதம் விற்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கு கட்டணமாக 500 வசூலிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
நாளை காலை திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இதற்கான விவரங்கள் வெளியாகும்.