Kathir News
Begin typing your search above and press return to search.

இயற்கை விவசாயிகளுக்கு முக்கியத்துவம்: பிரதமர் மோடி தகவல்!

இயற்கை விவசாயிகளுக்கு முக்கியத்துவம்: பிரதமர் மோடி தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  18 Jan 2022 2:18 PM GMT

நமது நாடு விவசாயத்தை நம்பி உள்ளது. இதனால் விவசாயத்திற்கு மத்திய அரசு அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. இதனிடையே இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாரணாசி தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலமாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இதில் அவர் பேசியதாவது: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ரசாயனம் பயன்படுத்தாமல் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு அனைத்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை அவர்களிடம் பாஜகவினர் எடுத்துக்கூற வேண்டும். ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy:The Economic Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News