Kathir News
Begin typing your search above and press return to search.

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதி? பஞ்சாபில் ராக்கெட் லாஞ்சர் உட்பட ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல்!

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதி? பஞ்சாபில் ராக்கெட் லாஞ்சர் உட்பட ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல்!

ThangaveluBy : Thangavelu

  |  22 Jan 2022 8:31 AM GMT

இந்திய திருநாட்டின் குடியரசு தினவிழா வருகின்ற ஜனவரி 26ம் தேதி வர உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் என்ற இடத்தில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் அதிரடியான சோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது சோதனை மேற்கொண்டதில் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து, கையெறி குண்டுகள், டெட்டனேட்டர்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை போலீசார் கைப்பற்றினர். குடியரசு தினவிழாவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தற்போது வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஒரு வேலை குடியரசு தினவிழாவை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைக்காக வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News