Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியது விதிமீறல் இல்லை: உயர்நீதிமன்றம்!

ஆதிசங்கரர் சிலை திறப்பு விழாவின்போது பிரதமர் மோடி உரையாற்றினார். இதனை இந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதே போன்று தமிழக கோயில்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பிரதமர் மோடி உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியது விதிமீறல் இல்லை: உயர்நீதிமன்றம்!

ThangaveluBy : Thangavelu

  |  10 Feb 2022 2:18 PM GMT

ஆதிசங்கரர் சிலை திறப்பு விழாவின்போது பிரதமர் மோடி உரையாற்றினார். இதனை இந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதே போன்று தமிழக கோயில்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனை ஒளிபரப்பு செய்வதற்காக தமிழக கோயில் நிதி பயன்படுத்தப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், பிரதமர் மோடியின் உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என கூறியுள்ளது.

இது தொடர்பான விசாரணையில் மத்திய அரசு உத்தரவின்படி பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதாகவும், அது அரசியல் இல்லை, ஆன்மீக நிகழ்ச்சி தான் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கள் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆதி சங்கரர் பற்றிதான் பிரதமர் மோடி பேசியுள்ளார் என்று குறிப்பிட்ட நீதிமன்றம் அவரது பேச்சு பற்றிய சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News