Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டின் வலிமை அதிகரிப்பால் உக்ரைனில் இந்தியர்கள் மீட்கப்பட்டனர்!

நாட்டின் வலிமை அதிகரிப்பால் உக்ரைனில் இந்தியர்கள் மீட்கப்பட்டனர்!

ThangaveluBy : Thangavelu

  |  2 March 2022 1:34 PM GMT

இந்தியாவின் வலிமை அதிகரித்திருப்பதால் உக்ரைனில் சிக்கியுள்ள நமது இந்தியரை பாதுகாப்பாக மீட்க முடிந்தது என்று பிரதமர் மோடி கூறினார்.

உத்தரபிதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் ராபர்ட்கஞ்ச் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கித்தவித்த நமது நாட்டினரை பாதுகாப்பாக வெளியேற்ற அனைத்து வகையிலான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை பல ஆயிரக்கணக்கான பேரை நமது நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம். அந்த பணிகளை துரிதப்படுத்த 4 மத்திய அமைச்சர்களை உக்ரைனில் உள்ள அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

மேலும், ஆத்மநிர்பர் அபியான் என்று கேலி செய்யும் மற்றும் நமது நாட்டுடைய பாதுகாப்பு படையினரை அவமதிக்கும் சிலரால் இந்தியாவை எப்போதும் வலுப்படுத்த முடியாது. தடுப்பூசி பற்றி வதந்திகளை பரப்பியவர்களும் இவர்கள்தான். எனவே தற்போது நமது நாட்டின் வலிமை அதிகரித்திருப்பதால்தான் உக்ரைனில் சிக்கிய நமது நாட்டினரை மீட்டோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: The Financial Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News