Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிஜாப் வழக்கு தற்போது விசாரணை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!

ஹிஜாப் வழக்கு தற்போது விசாரணை  இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!

ThangaveluBy : Thangavelu

  |  16 March 2022 11:13 AM GMT

ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அடிப்படை இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. எனவே அனைத்து மாணவிகளும் சீருடையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்ற தீர்ப்பையும் வழங்கியது. இதனை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்ற கதவை தட்ட முயற்சி செய்தனர்.

இந்நிலையில், ஹிஜாப் தொடர்பான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை உடனடியாக விசாரணைக்கு எடுக்க முடியாது, ஹோலி விடுமுறைக்கு பின்னர் விசாரணைக்குப் பரிசீலனை செய்யப்படலாம் என்று நீதிபதிகள் கூறினர்.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News