Kathir News
Begin typing your search above and press return to search.

அமைதியாக ஹோலி கொண்டாடிய இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் கல்வீசி அடாவடி!

அமைதியாக ஹோலி கொண்டாடிய இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் கல்வீசி அடாவடி!

ThangaveluBy : Thangavelu

  |  21 March 2022 3:44 AM GMT

அமைதியான முறையில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அம்ருகாவில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து மக்கள் மீது இஸ்லாமியர்கள் கொலைவெறியுடன் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் இந்துக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணக்கலர் பொடிகளை தூவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதே போன்று உத்தரப்பிரதேச மாநிலம், அம்ருகாவிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட இந்துக்கள் இசையுடன் ஹோலி பண்டிகையை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இசையை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று அங்குள்ள இஸ்லாமியர்கள் கற்களை இந்துக்கள் மீது வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் சில இந்துக்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி அங்குள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்கள் கொண்டு வந்தனர்.

Source: Thamarai Tv

Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News