Kathir News
Begin typing your search above and press return to search.

"எல்லையை தாண்ட தயங்கமாட்டோம், இறங்கி அடிப்போம்!" தீவிரவாத செயல்பாடுகளுக்கு ராஜ்நாத்சிங் பகீரங்க எச்சரிக்கை!

எல்லையை தாண்ட தயங்கமாட்டோம், இறங்கி அடிப்போம்!  தீவிரவாத செயல்பாடுகளுக்கு  ராஜ்நாத்சிங் பகீரங்க எச்சரிக்கை!

DhivakarBy : Dhivakar

  |  24 April 2022 9:15 AM GMT

அஸ்ஸாம்: "நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய பா.ஜ.க அரசு தீவிரமாகச் செயல்படுகிறது" என்று நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்தியாவில் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு என எல்லா முக்கிய எல்லைகளிலும் தற்போது தீவிரவாத செயல்பாடுகள் குறைந்து வருகிறது. இருப்பினும் தீவிரவாத ஊடுருவல்களும், தாக்குதலுக்கான எச்சரிக்கைகளும் இருந்துதான் வருகிறது


இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் " பயங்கரவாத நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்க நம் நாடு செயல்பட்டு வருகிறது." என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் " நம் நாட்டு எல்லையில் இருந்து நாம் குறி வைக்கப்பட்டால். நாம் எல்லை தாண்ட கூட தயங்க மாட்டோம். நம் நாட்டின் கிழக்கு எல்லையில் தற்போது ஊடுருவல் குறைந்துவிட்டது. சற்று அமைதி நிலவி வருகிறது" .

என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

J Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News