Kathir News
Begin typing your search above and press return to search.

அல்கொய்தா மிரட்டல் எதிரொலி - நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்ட என்.ஐ.ஏ

அல்கொய்தா மிரட்டல் எதிரொலி - நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்ட என்.ஐ.ஏ

ThangaveluBy : Thangavelu

  |  11 Jun 2022 4:55 AM GMT

பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபர் சர்மா நபிகள் நாயகம் பற்றி விமர்சனம் செய்ததை தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கண்காணிப்பை தீவிரப்படுத்துவதும் மட்டுமின்றி மிகவும் விழிப்புடன் இருக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியதை தொடர்ந்து பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நூபுர் சர்மா நீக்கப்பட்டுள்ளார். இவரது பேச்சுக்கு பா.ஜ.க. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் சில இஸ்லாமிய நாடுகளில் இருப்பவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நூபுர் சர்மாவின் பேச்சைக் கண்டித்து இந்தியாவில் சில முக்கிய நகரங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது. இந்த அமைப்பு இணையத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பயங்கரவாத அமைப்புகள் தாக்குல் நடத்தலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் நிலையில் இருக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே மாநில அரசுகள் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தீவிரமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News