Kathir News
Begin typing your search above and press return to search.

இறைச்சிக் கறியை சிவன் கோயிலுக்குள் விட்டெறிந்த சம்பவம்! உச்சக்கட்ட பரபரப்பில் ஜார்கண்ட் மாநிலம்!

இறைச்சிக் கறியை சிவன் கோயிலுக்குள் விட்டெறிந்த சம்பவம்! உச்சக்கட்ட பரபரப்பில் ஜார்கண்ட் மாநிலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 July 2022 2:20 PM GMT

ஜார்க்கண்ட்: 'ராம்பூர்' என்னும் கிராமத்தில் பிற சமூகத்தினரை சேர்ந்த சமூகவிரோதிகள் சிலர், சிவன் கோயிலுக்குள் இறைச்சிக் கறியை எறிந்து விட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


ஜார்கண்ட் மாநிலம், லோஹர்டாகா மாவட்டத்தில், 'ராம்பூர்' என்ற கிராமத்தில், பெருமளவு மக்கள் வழிபடும் சிவன் கோயில் ஒன்றுள்ளது. அக்கோயிலுக்குள் பிற மதத்தைச் சேர்ந்த. சமூக விரோதிகள் சிலர் இறைச்சிக்கறியை எறிந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


இதனால் இரு தரப்பு மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. காவல்துறையினர் மற்றும் ஊர் பெரியோர்கள், இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


இச்சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறை அல்ல, இதே ஆண்டு பிப்ரவரி மாதம் 'புல்பாரியா' பகுதியிலுள்ள காளிதுர்கா கோவிலில், சமூகவிரோதிகள் சிலர் இறைச்சிகளை விட்டெறிந்து இந்து மத உணர்வாளர்களின் நம்பிக்கைகளை அவமதித்துள்ளனர்.


நாடு தழுவிய நிலையில், இந்துமத உணர்வாளர்களின் நம்பிக்கையை சிதைப்படுத்தும் முயற்சிகள் தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

OpIndia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News