Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் தீய சக்திகளை முறியடிப்போம்: பிரதமர் மோடி!

நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் தீய சக்திகளை முறியடிப்போம்: பிரதமர் மோடி!

ThangaveluBy : Thangavelu

  |  19 July 2022 10:49 AM GMT

'நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்க முயற்சி செய்யும் தீய சக்திகளை நாம் திறம்பட முறியடிக்க வேண்டும்' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற கடற்படை கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசிய பாதுகாப்பு என்பது எல்லைகளுக்கு மட்டுமில்லை. அவை பரந்து விரிந்துள்ளது. நமது ராணுவ திறனுக்கு மேலும் வலுவூட்ட நமது ஆயுதப்படையினர் உட்பட அனைத்து பிரிவினரும் ஒன்றாக சேர்ந்து நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்க முயற்சி செய்யும் தீய சக்திகளை திறம்பட முறியடிக்க வேண்டும்.

மேலும், உலக அரங்கத்தில் இந்தியா தன்னை நிலைநிறுத்தி வருகிறது. எனவே நம்மை பற்றி தவறான பிரச்சாரத்தால் நமக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெறுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் ராணுவத்துக்கான பட்ஜெட் உயர்த்தப்பட்டதுடன் ராணுவ உற்பத்திக்கான சூழலையும் உள்நாட்டிலேயே உருவாக்கியிருக்கோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News