Kathir News
Begin typing your search above and press return to search.

பணமோசடி செய்தால் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உண்டு - உச்சநீதிமன்றம் அதிரடி!

பணமோசடி செய்தால் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உண்டு - உச்சநீதிமன்றம் அதிரடி!

ThangaveluBy : Thangavelu

  |  27 July 2022 10:58 AM GMT

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்வதற்கான அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையினர் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சில விதிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தனர். அதன்படி மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்படுவதற்கான ஆதாரங்களை காட்டாமல் குற்றம்சாட்டப் பட்டவர்களை கைது செய்வதற்கு தடையற்ற அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது ஆகும் என்றார்.

அதே போன்று மத்திய அரசும், அரசியலமைப்பு சட்டத்தின் படி பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை நியாயப்படுத்தியது. மேலும், பணமோசடி என்பது விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோசடி உள்ளிட்டோர் மட்டும் பயன்படுத்தவில்லை. தீவிரவாதிகளும் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதால் பணமோசடி நிதி அமைப்புகளுக்கு மட்டுமின்றி நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றுக் கூறி பணமோசடி தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் பற்றி மத்திய அரசு ஆதரவு அளித்தது.

இந்நிலையில், விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது. பணமோசடியில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்யப்படுவது தன்னிச்சையான நடவடிக்கை அல்ல. எனவே பண மோசடி தடுப்பு சட்டத்தின் படியே சோதனை செய்வதற்கும், கைது செய்வதற்கும், வழக்குகளை பதிவு செய்வதற்கும் அமலாக்கத்துறைக்கு அனுமதி உண்டு. மேலும், பணமோசடி செய்வதர்களுக்கு அமலாக்கத்துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றி அறிக்கையை காண்பிக்க வேண்டிய அவசிமில்லை. இவ்வாறு நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News