Kathir News
Begin typing your search above and press return to search.

அந்த மாநிலத்துக்கு ரயில்வே ஸ்டேஷனே மோடி வந்ததுக்கு அப்புறம் தான் வந்துச்சு - சத்தமில்லாமல் நடந்திருக்கும் சாதனை!

அந்த மாநிலத்துக்கு ரயில்வே ஸ்டேஷனே மோடி வந்ததுக்கு அப்புறம் தான் வந்துச்சு - சத்தமில்லாமல் நடந்திருக்கும் சாதனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 March 2023 1:48 AM GMT

இந்திய இரயில்வே 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் இல்லாத சேவை வழங்க முழு வேகத்தில் முன்னேறி வருகிறது. வடகிழக்கு ரயில்வேயின் முக்கிய சாதனையாக துதானி -மேன்டிபதர் ஒற்றை ரயில்பாதை மற்றும் அபயபுரி- பஞ்சரத்னா இரண்டைப் ரயில்பாதையும், 2023, மார்ச் -15ல் முழுமையாக மின் மயமாக்கப்பட்டுள்ளன. மத்திய ரயில்வே மின்மயமாக்கல் அமைப்பு இந்த வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணியை மேற்கொண்டது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ஒரே ரயில் நிலையம் மெண்டிபதர் ஆகும். இது பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிறகு 2014 முதல் இயங்கி வருகிறது. மின்சார இழுவை இயக்கப்பட்ட பிறகு, மின்சார இன்ஜின் மூலம் இழுத்துச் செல்லப்படும் ரயில்கள் இப்போது மேகாலயாவின் மெண்டிபதரில் இருந்து நேரடியாக இயக்க முடியும். இது சராசரி வேகத்தை அதிகரிக்கும்.

மேலும் பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ரயில்கள் இந்தப் பிரிவுகள் வழியாக முழுப் பகுதி வேகத்துடன் இயக்க முடியும். மற்ற மாநிலங்களிலிருந்து மின்சார இன்ஜின்கள் மூலம் இழுத்து வரப்படும் பார்சல் மற்றும் சரக்கு ரயில்கள் நேரடியாக மேகாலயாவை அடைய முடியும்.

மின்மயமாக்கல் வடகிழக்கு இந்தியாவில் ரயில்களின் இயக்கத்தை கணிசமாக மேம்படுத்தும். புதைபடிவ எரிபொருளில் இருந்து மின்சாரத்திற்கு மாறுவதால் ஏற்படும்.

இதனால் மாசுபாடு குறைவதோடு, இப்பகுதியில் ரயில்வே அமைப்பின் செயல்திறனும் மேம்படும். இது தடையற்ற போக்குவரத்தை எளிதாக்குவதோடு, விலைமதிப்பற்ற அந்நியச் செலாவணி சேமிப்பைத் தவிர வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து செல்லும் ரயில்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

Input From: India Today

Next Story
கதிர் தொகுப்பு
Trending News