Kathir News
Begin typing your search above and press return to search.

சீன அதிபரிடம் தனியாக பேசிய பிரதமர்.. விஷயம் இதுதானா..

சீன அதிபரிடம் தனியாக பேசிய பிரதமர்.. விஷயம் இதுதானா..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Aug 2023 3:40 AM GMT

சீனு ராணுவம் தற்போது எல்லையை மீறி இந்தியாவின் பகுதிகளையும் ஆக்கிரமித்து அட்டூழியம் செய்வது வாடிக்கையாகி வருகிறது. சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி விட்டது. இதனால் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது. இதற்கிடையே, ஜோகன்ஸ் பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு அதிபர்களும் கலந்து கொண்டு இருந்தார்கள்.


இதில் சீனா நாட்டின் பிரதமரும் பங்கேற்று இருந்தார். மாநாட்டுக்கு இடையே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கி, சிறிது நேரம் தனியாக பேசினர். இதற்கு இரண்டு நாட்டுத் தலைவர்களும் தனியாக பேசுகிறார்கள் என்று ஒரு பிரச்சனை எழுந்தது அதற்கு தற்பொழுது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்ன பேசினார் என்பது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா கூறியதாவது, "இந்தியாவின் லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது.


எல்லை பிரச்சினையில் இருதரப்பிலும் அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவம். இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும். எல்லை தாண்டி வரும் பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News