Begin typing your search above and press return to search.
பிரதமர் மோடியின் கேரளா மற்றும் தமிழகப் பயணம்!!

By : Bharathi Latha
பிரதமர் மோடி கேரளா மற்றும் தமிழகத்துக்கு நிறைய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். கொச்சி பிபிசிஎல்லில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பாலிப்ரோப்பிலீன் உற்பத்தி பிரிவிற்கு அடிக்கல் நாட்டினார். ரூ.2,650 கோடி மதிப்பிலான என்.ஹெச்-66 சாலைத் திட்டம் மற்றும் கோழிக்கோடு புறவழிச்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடி முதலீட்டில் 'சிட்டி கேஸ்' விநியோகக் கட்டமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மணலியில் ரூ.1,490 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் லூப் கலவை ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 2 அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 3 புதிய ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார்.
Next Story
