கல்பாக்கம் அணுமின் நிலையம்!! பிரதமர் மோடி பாராட்டு!!

By : Bharathi Latha
பிரதமர் மோடி கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை மாற்ற நிலையை அடைந்துள்ளதற்காக அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த அணுமின் நிலையம் கல்பாக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த அணுமின் நிலையம் தோரியத்திலிருந்து நியூட்ரான் பிரிக்கப்பட்டு தயாராக இருந்ததை தொடர்ந்து முன்னேறி மின் உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது அணுசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுத்து, அணுசக்தி பயணத்தில் ஒரு தீர்க்கமான அடியை எடுத்து வைத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், நாட்டின் தோரியம் இருப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு தீர்க்கமான படியாகும் என்றும் கூறியுள்ளார்.
