Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்கா காலநிலை குறித்த மாநாட்டில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு!

அமெரிக்கா காலநிலை குறித்த மாநாட்டில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 April 2021 5:06 PM IST

ஏப்ரல் 22-23 தேதிகளில் நடைபெறவிருக்கும் காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தார். பிரதமர் மோடி ஜனாதிபதி பிடனின் முயற்சியை வரவேற்று அழைப்பை ஏற்றுக்கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று ஊடகங்களிடையே உரையாற்றிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி, "அமெரிக்க ஜனாதிபதியின்காலநிலைக்கான சிறப்பு தூதர் ஜான் கெர்ரி ஏப்ரல் 5 முதல் 8 வரை டெல்லிக்கு வருவார்" என்று கூறினார்.


குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க ஜனாதிபதி பிரதமர் நரேந்திர மோடி உட்பட 40 உலகத் தலைவர்களை வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நடக்கும் காலநிலை உச்சிமாநாட்டிற்கு அழைத்திருக்கிறார். அமெரிக்க வெள்ளை மாளிகை மார்ச் 26 அன்று இதை அறிவித்தது. காலநிலை குறித்த தலைவர்கள் உச்சி மாநாட்டை ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஜோ பிடென் நடத்தவுள்ளார்.



தனது அழைப்பில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக தலைவர்களை உச்சிமாநாட்டைப் பயன்படுத்தி தங்கள் நாடுகளும் வலுவான காலநிலை லட்சியத்திற்கு எவ்வாறு பங்களிக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்ட ஒரு வாய்ப்பாக பயன்படுத்த உள்ளதாக வலியுறுத்தினார்.

ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், மார்ச் 26 அன்று வெள்ளை மாளிகை, "இன்று, ஜனாதிபதி பிடென் 40 உலகத் தலைவர்களை ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடத்தவிருக்கும் காலநிலை குறித்த தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு அழைத்தார். வீடியோ கான்பெரன்ஸ் முறையில் தலைவர்கள் உச்சி மாநாடு பொதுமக்கள் பார்வைக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்" எனத் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News