Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா காரணமாக வங்கதேசம் எல்லை மேலும் 14 நாட்களுக்கு மூட உத்தரவு!

கொரோனா காரணமாக வங்கதேசம் எல்லை மேலும் 14 நாட்களுக்கு மூட உத்தரவு!

ParthasarathyBy : Parthasarathy

  |  30 Jun 2021 12:31 AM GMT

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிக பாதிப்புகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு பின் இந்தியாவுடனான எல்லையை 2 வாரங்களுக்கு வங்காளதேசம் மூடியது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் டெல்டா வகை கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு வங்காளதேசம் அரசு தனது எல்லையை மேலும் 14 நாட்களுக்கு மூடிவைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்தியாவில் தற்போது புதிதாக டெல்டா வகை கொரோனாவின் பாதிப்புகள் படி படியாக அதிகரித்து வருகிறது. இந்த டெல்டா வகை கொரோனாவால் உயிர் இழப்புக்குகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்காளதேசம் இந்தியா உடன் இருக்கும் எல்லையை மேலும் இரண்டு வாரங்களுக்கு மூடி வைக்க வங்காளதேச அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவால், பயணிகளின் போக்குவரத்தை எல்லை பகுதியில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.


எனினும் வங்காளதேச அரசு, சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதேபோன்று, மருத்துவம் சார்ந்த இயக்கங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வங்காளதேச எல்லை பகுதிக்குள் நுழைய 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பயணிகள் கட்டாயமாக கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News