Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசு அதிரடி..! திருநங்கைகளுக்கு 1,500 ரூபாய் நிதியுதவி - பயன் பெறுவது எப்படி?

மத்திய அரசு அதிரடி..! திருநங்கைகளுக்கு 1,500 ரூபாய் நிதியுதவி - பயன் பெறுவது எப்படி?

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  24 May 2021 3:02 PM GMT

கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திருநங்கைகளுக்கு ₹1500 ரூபாய் உதவித் தொகை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்று சூழல் காரணமாக பல தொழில்கள், வியாபாரங்கள் நசிவடைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த தொற்று காரணமாக திருநங்கைகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு அடிப்படை தேவையான உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட பெரும் பற்றாக்குறையை சந்திக்க நேரிட்டுள்ளது.

இதனால் தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று திருநங்கைகளிடம் இருந்து மத்திய அரசுக்கு தொலைபேசி அழைப்புகளும் இமெயில் மூலம் கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து திருநங்கைகளின் நலனை கவனிக்கும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், திருநங்கைகளின் அடிப்படை தேவைகளுக்கு உடனடி உதவி அளிக்க தலா ரூ.1,500 பிழைப்பூதியமாக வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த நிதியுதவி திருநங்கைகள் தங்களின் அன்றாட தேவையை நிறைவேற்றிக் கொள்ள ஓரளவுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த உதவித் தொகை குறித்த விழிப்புணர்வை திருநங்கைகள் இடையே பரப்ப வேண்டும் என தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகளிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உதவித் தொகையை பெறுவதற்கு திருநங்கைகள் கீழ்கண்ட இணைப்பில் உள்ள படிவத்தில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற அடிப்படை விவரங்களை தெரிவித்து இந்த உதவித் தொகைக்கு திருநங்கைகள் அல்லது அவர்கள் சார்பில் சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்க முடியும்

https://forms.gle/H3BcREPCy3nG6TpH7 என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News