Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி ஆட்சிக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168 சதவீதம் குறைந்துள்ளது: இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் 265 சதவீதம் குளோஸ்!

மோடி ஆட்சிக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168 சதவீதம் குறைந்துள்ளது: இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் 265 சதவீதம் குளோஸ்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Dec 2022 8:13 AM GMT

பிரதமர் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168 சதவீதம் குறந்துள்ளது. கடந்த 2015-ல் இருந்து இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் 265 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

உரி தாக்குதலுக்கு எதிராக 2016-ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் கலவரத்தின் மூலமாக நிகழும் வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு விகிதம் 89 சதவீதமாக குறைந்துள்ளது, 6,000 போராளிகள் சரணடைந்துள்ளனர்.

மோடி ஆட்சியின் கீழ், ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் குற்றம் 94 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் இருமடங்கு, அதாவது 265 சதவீதம் குறைந்துள்ளன.

திரிபுரா,மேகாலயா மாநிலங்களில் முழுவதுமாகவும், அசாமில் 60 சதவீதமும் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் அமைதிக்கான புதிய சகாப்தம் தொங்கியுள்ளது என்றார்.

Input From: NDTV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News