Kathir News
Begin typing your search above and press return to search.

வரலாற்றில் முதன்முறை: சுவாமி ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் செய்யும் கர்நாடக பக்தர்!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் வரலாற்றில் முதன் முறையாக கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர் 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்த உள்ளார்.

வரலாற்றில் முதன்முறை: சுவாமி ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் செய்யும் கர்நாடக பக்தர்!

ThangaveluBy : Thangavelu

  |  4 Jan 2022 6:18 AM GMT

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் வரலாற்றில் முதன் முறையாக கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர் 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்த உள்ளார்.

கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகை புரிவர். அது போன்று வருபவர்கள் தேங்காய் நெய் அபிஷேகம் செய்வர். தங்களால் முடிந்த அளவு 3 முதல் 5 தேங்காய் அளவுக்கு எடுத்து வருவது வழக்கம்.

அதே போன்று கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர் ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்த உள்ளார். நாளை காலை (ஜனவரி 5) 18 ஆயிரம் தேங்காய்கள் மற்றும் அதற்கான நெய்யை லாரி மூலம் பம்பைக்கு கொண்டு வரப்பட்டு ஊழியர்கள் மூலம் தேங்காய்களில் நெய் நிரப்பப்பட்டு, அதன் பின்னர் டிராக்டர் மூலம் சன்னிதானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அதிகாலை ஐயப்பனுக்கு தேங்காய் நெய்யபிஷேகம் நடத்தப்படுகிறது. இதனை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

Source: Polimer

Image Courtesy: Kerala Kaumudi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News